கதாநாயகர்கள்தான் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? கதாநாயகிகள் நாங்க வாங்கக் கூடாதா என ? – நடிகை தமன்னா கேள்வி.?

 

கதாநாயகர்களை போல் கதாநாயகிகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், நடிகை தமன்னா.

இவரை தெலுங்கில் ரவிதேஜா திரைப்படத்தில் நடிக்க அணுகினர்.

ஆனால் அந்த ரவி தேஜா திரைப்படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும்,

அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதால் நடிகை தமன்னா அந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன.

இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர்.

ஆனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

இப்போது எந்த திரைப்பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.

எனவே அவரது திரைப்படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சம்பளம் என்பது நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.

நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள்.

கதாநாயகனை போலவே கதாநாயகியும் படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? கதாநாயகர்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு நடிகை தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.