கேப்மாரி திரை விமர்சனம்
நடிப்பு – ஜெய், வைபவி சாண்டில்யா,
அதுல்யா ரவி, சித்தார்த் விபின், சத்தியன் மற்றும் பலர்
தயாரிப்பு – கிரின் சிக்னல்
இயக்கம் – எஸ்.ஏ.சந்திரசேகர்
இசை – சித்தார்த் விபின்
மக்கள் தொடர்பு – பி.டி.செல்வாகுமார்
வெளியாகும் தேதி – 13 டிசம்பர் 2019
ரேட்டிங் – 1/5
தமிழ் திரைப்பட உலகிற்கு சாபக் கேடாக விஷயம் எப்போதாவது ஒரு முறை மிகவும் மோசமான, கீழ்த்தரமான திரைப்படங்கள் வெளிவரும்.
இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு நல்ல கதையையும் நல்ல திரைப்படத்தைக் கொடுத்து, எப்படியாவது நாமும் தமிழ் திரைப்பட உலகில் பேசப்பட மாட்டோமா என ஏங்கிக் தவிக்கும் பல இயக்குனர்கள் மத்தியில் புரட்சி இயக்குனர் என பெயர் வாங்கப்பட்ட இளைய தளபதி விஜய்யின் தந்தையும் மூத்த
இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இப்படி ஒரு கேவலமான திரைப்படத்தை
கொடுத்திருக்கிறார்.
இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்து இன்றைய இளம் தலைமுறையை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் காட்சிகளை வைத்து இப்படிப்பட்ட கேவலமான ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்
இந்தப் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு முன்புதான் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலரைப் பார்க்க நேர்ந்தது. இந்த மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் சொல்லத் துடிக்கும் இயக்குனர் மணிகண்டன் போன்ற இன்னும் சில இயக்குனர்களுக்கு மத்தியில் கேப்மாரி போன்ற படத்தைக் கொடுத்து தன்னையும் ஒரு இயக்குனர் என எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்லிக் கொண்டிருந்தால் அவரை உண்மையான சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே திரைப்படத்தின் டைட்டிலுக்கு முன்பாகவே நன்றி – காமசூத்ரா புத்தகம் என போட்ட முதல் கேவலமான தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். படுக்கையறைக் காட்சிகளைக் கூட ஆபாசமில்லாமல், விரசமில்லாமல் சொல்ல முடியும். அதற்கு உதாரணமாக பல திரைப்படங்களைச் சொல்லலாம்.
ஆனால், இந்தப் திரைப்படத்தில் காட்டியிருக்கும் படுக்கையறைக் காட்சிகளை வைத்து ஏ படம் என பெரிதாக போஸ்டரில் போட்டு, ஒரு காலத்தில் பல ஊர்களில் காலை 9 மணி காட்சிகளில் சில மலையாளத் திரைப்படங்களைத் பிட்டு திரையிட்டது போல திரையிட்டால் நல்ல வசூலைக் குவிக்கலாம். என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நினைத்திருக்கலாம்
எந்த விதத்தில் எல்லாம் ஒரு காட்சியை ஆபாசமாக கேமிரா ஆங்கிள் மூலம் காட்ட முடியும் என்பதை ஒளிப்பதிவாளர் ஜீவன், பல படங்களைப் பார்த்து கற்றுத் தேர்ந்திருப்பார் போலிருக்கிறது. தமிழில் சில படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவர் என்பதை நினைக்கும் போது……………
சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் கதாநாயகன் ஜெய், ரயிலில் நள்ளிரவு பயணத்தில் கூட பயணிக்கும் கதாநாயகி வைபவி சாண்டில்யாவுக்கும் பீர் கொடுத்து நான்காவது பிரில் போதையாக்கி உடல் ரீதியாக கதாநாயகன் ஜெய் இணைகிறார்.
இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவரும் உடனேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.
திருமணம் நடந்து தனி வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கதாநாயகன் ஜெய் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டாம் கதாநாயகி அதுல்யாவுக்கு, கதாநாயகன் ஜெய் மீது ஒரு தலைக் காதல். அது கதாநாயகன் ஜெய்யின் திருமணத்திற்குப் பிறகும் தொடர்கிறது.
ஒரு நாள் இரண்டாம் கதாநாயகி அதுல்யாவை வீட்டில் பைக்கில் கொண்டு விடும் போது இருவரும் வீட்டில் பீர் குடித்து போதையாகி உடலால் இணைகிறார்கள். அதனால், தமிழ் சினிமா வழக்கப்படி இரண்டாம் கதாநாயகி அதுல்யா கர்ப்பமாகிறார். கதாநாயகன் ஜெய், கதாநாயகி வைபவி சாண்டில்யா இருக்கும் வீட்டிற்கே வருகிறார். ஒரே வீட்டில் இருவருடனும் வாழ்க்கை நடத்துகிறார் கதாநாயகன் ஜெய். அடிக்கடி பிரச்சினைகள் வர அவர்கள் மூவரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இந்தப் திரைப்படம் கதாநாயகன் ஜெய், இரண்டாம் கதாநாயகி அதுல்யா ஆகியோரை நம்பி எடுக்கப்படவில்லை. வைபவி சாண்டில்யாவின் கிளாமரை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
அவரும் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை எந்த வஞ்சனையும் இல்லாமல் மிக தாரளமாக நடித்திருக்கிறார்.
சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த ஜெய் தானா இவர் என்பதை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. வைபவி சாண்டில்யாக்கு முன்பெல்லாம் அதுல்யா கண்டிப்பாக தேறவில்லை.
அலுவலகத்தில் வேலை பார்க்கும் சத்யன், தேவதர்ஷினி, சித்தார்த் விபின் என அனைவருமே அடிக்கடி இரட்டை அர்த்தங்களில் பேசுகிறார்கள்.
சித்தார்த் விபின் தான் படத்தின் இசையமைப்பாளர். ஒரு பாடலும் ரசிக்கும்படி இல்லை. படுக்கையறை காட்சிகளுக்கு மட்டுமே பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.
சரி, படத்தின் முடிவிலாவது ஏதோ ஒரு கருத்தைச் சொல்லி, இதுவரை சொன்னதற்கெல்லாம் ஒரு விமோசனத்தைத் தேடிக் கொள்வார்கள் என்று பார்த்தால், அதையெல்லாம் செய்துவிடுவோமா என திரைப்படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குனர்
கேப்மாரி – மக மட்டமான குப்பை மாரி