கொரில்லா’ படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் – ராதாரவி

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா – ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொரில்லா’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசியதாவது “என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும், கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். எனக்கும் ஒரு நல்ல வேடம் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன்” என்று அவர் பேசினார்.