தடம்’ படத்தின் 50 வது நாள் வெற்றி – பிரார்த்தனை செய்தார் நாயகன் அருண் விஜய்.
‘இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘தடம்’. இந்த படம் நடிகர் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில், ‘தடம்’ திரைப்படம் தற்போது 50வது நாளை கடந்துள்ளது. இந்த நிகழ்வு படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் அருண் விஜய், குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து, கிரிவலம் சென்றிருக்கிறார். இதற்கான புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதன் இணைப்பு👇🏼
Visited the Thiruvannamalai temple day before with family to thank and get the blessings for Thadam’s successful 50th day today!! Did a midnight #GiriValam. Had a peaceful walk! Feeling blessed..🙏 pic.twitter.com/1mHALa6lwe
— ArunVijay (@arunvijayno1) April 18, 2019