தமிழக அரசியலின் மையமாக மீண்டும் போயஸ் கார்டன்.? சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பதில்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் தன் பைரவி படம் மூலம் ஹீரோவாக உயர்த்தியவர் கலைஞானம்.

அவருக்கான பாராட்டு விழா தற்போது சென்னையில் நடைபெறவுள்ளது.

அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் செல்லும்போது சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன்.

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை மதிப்பிற்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனையடுத்து வருகிற சித்திரை 1ல் கட்சி பெயர் அறிவிக்கப்படுமா? என்று கேட்டதற்கு.. விரைவில் தெரிவிப்பேன் என்றார்.

அதனையடுத்து போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் களத்தின் மையமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள்” என சூப்பர் ஸ்டார் நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.