நட்புனா என்னானு தெரியுமா – திரை விமர்சனம்

நடிப்பு – கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன்
தயாரிப்பு – லிப்ரொ புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சிவா அரவிந்த்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
வெளியான தேதி – 17 மே 2019
ரேட்டிங் – 2.75/5
சினிமாவிற்கு கதை எழுத வரவில்லையா, இருக்கவே இருக்கிறது, அட்லீ பார்முலா என இன்றைய இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. 
 
பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை படத்தை ஏற்கெனவே உரிமை வாங்காமல் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்று எடுத்து வசூலை அள்ளினார்கள். இப்போது அதே கதையை மீண்டும் நட்புனா என்னானு தெரியுமா என மீண்டும் எடுத்திருக்கிறார்கள்.
 
எந்தக் காலத்திற்கும் பொருத்தமான ஒரு கதை, முதல் பாதியில் மட்டும் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்திருக்கும் இயக்குனர் சிவ அரவிந்த், இரண்டாவது பாதியை கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் நகர்த்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
 
கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ்  மூன்று பேரும் ஒன்றாக ஒரே ஆஸ்பிட்டலில் பிறந்தவர்கள் ஒன்றாக  வளர்ந்தவர்கள்
சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பத்தாவது படிப்புக்கு மேல் தாண்டாதவர்கள் 
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு சம்பவத்திற்கு பிறகு பெண்களை நம்ப கூடாது. இனி நமது வாழ்வில் பெண்களே கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்
வேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், முவரும் சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். மிகவும் தாமதமாக யோசித்து
திருமணத்திற்கு தேவையான.  அனைத்தையும் தயார் செய்து கொடுக்கும்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.
 
இந்த நிலையில் ஒரு இடத்தில் ரம்யா நம்பீசனைப் பார்க்கும் 
ராஜூவுக்கு காதல் வந்து விட, ராஜு அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்
அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். 
ரம்யாவைத்தான் காதலிக்கப் போகிறேன் என கவின், அருண்ராஜா ஆகியோருக்கு காட்டுகிறார். அப்போது
இது மற்ற இருவருக்கும் சந்தேகத்தை உண்டுபண்ண, ராஜூ தனது நண்பர்களை கூட்டிச் சென்று ரம்யா நம்பீசனை காட்டுகிறார். ரம்யாவை பார்க்கும் இருவருக்குமே பிடித்துப் போகிறது.
 
ரம்யாவிடம் திடீரெனச் சென்று கவின் அவரைக் காதலிப்பதாகச் சொல்ல, ரம்யாவும் உடனே காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்  . பின்னர்தான் கவின், ரம்யாவைக் காதலிப்பது ராஜுவுக்குத் தெரிய வருகிறது. இருவரும் சண்டை போட்டுப் பிரிகிறார்கள்
 
.ராஜுவின் பக்கம் அருண்ராஜா சென்றுவிடுகிறார். இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் கவினை உசுப்பேற்றிவிட கவின் ரம்யாவை காதலிப்பதாக கூறுகிறார். ரம்யாவும், எந்தவித எதிர்ப்பும் இன்றி கவினின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இதனால் இவர்களது நட்பில் விரிசல் ஏற்படுகிறது.
கவின் .கடைசியில் பிரிந்த நண்பர்கள் முவரும் இணைந்தார்களா, கவின் – ரம்யா நம்பீசன் காதல் சேர்ந்ததா? அதன் பின்னணியில் நடக்கும் பின்னணியே நட்பான மீதிக்கதை.
 
ரம்யா நம்பீசனை பார்க்கும் 
கதாநாயகியாக ரம்யா நம்பீசன். கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறார். அதற்காகவே அவருக்கு மாடர்ன் உடைகளைப் போட்டு சமாளித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் நடிப்பில் அவருடைய அனுபவம் தெரிகிறது.
 
இந்த படத்தின் மூலம் கவின் தன்னை ஒரு நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். நண்பர்களுடனான காட்சியிலும் சரி, காதலியுடனான காட்சியிலும் சரி சிறப்பாக நடித்திருக்கிறார். முன்று நண்பர்களின் நட்புக்கு இடைஞ்சலாக வரும் கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
முதல் ஹீரோவாக கவின், டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரிலேயே தன் யதார்த்த நடிப்பால் நேயர்களைக் கவர்ந்தவர். இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். சின்னத்திரையில் நடித்த யதார்த்தமான நடிப்பை பெரிய திரையிலும் கொடுத்திருக்கிறார். இனி, மினிமம் பட்ஜெட் படங்களின் நாயகனாக வலம் வருவதற்கு உறுதி நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது 
 
இரண்டாவது ஹீரோவாக புதுமுகம் ராஜு. புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி முதல் படத்திலேயே மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். கவினைக் காட்டிலும் இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய அதிக வாய்ப்பு. காதலிப்பது, நண்பனால் ஏமாற்றப்படுவது, காதலில் தோல்வியடைவது என அவர் கதாபாத்திரத்தில் சேர்க்கப்பட்ட அத்தனை உணர்வுகளையும் சரியாகவே கொடுத்திருக்கிறார்.
அனைத்தையும் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் ராஜூ தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்
மூன்றாவது ஹீரோவாக 
இயக்குநராக வெற்றி வாகை சூடியிருக்கும் அருண்ராஜா காமராஜூக்கு படத்தின் கலகலப்புக்கு பெரிதும் படத்திற்கு மிகவும் பக்க பலம். அவருடைய அப்பாவித்தனமான முகமும், செய்கைகளும் சுவாரசியம்.இந்த படம் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படமாக இருக்கும் எனலாம். இனி முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். கனா படத்தை இயக்கி வெற்றி பெற்றவர். தொடர்ந்து நடித்தால் மணிவண்ணன் இடத்தை எட்டிப் பிடிப்பது நிச்சயம்.
 
இந்த மூன்று நண்பர்களின் நடிப்புதான் படத்திற்கு முதுகெலும்பு. அவர்களுடைய நடிப்புதான் படத்தைக் காப்பாற்றுகிறது

மற்றபடி இளவரசு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், ரமா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் மூன்று நண்பர்களைச் சுற்றியே நகர்வதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக காட்சிகள் இல்லை. இளவரசு மட்டும் அவ்வப் போது வந்து போகிறார். மொட்ட ராஜேந்திரன், மன்சூரலிகான், அழகம் பெருமாள், ரமா ஆகியோர் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள்.

இந்த மாதிரியான படங்களுக்கு பாடல்கள்தான் விசிட்டிங் கார்டாக அமைய வேண்டும். அதை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபகாரன் செய்யத் தவறிவிட்டார்.
 
ஒருபாடல் கூட மனதில் நிற்கவில்லை.

தனது முதல் படத்திலேயே நட்பு, காதலை மையப்படுத்திய கதையை இயக்கி இளைஞர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வரை மெதுவாக போகும் கதை, கதாபாத்திரங்கள் பற்றிய புரிதல் ஏற்படும் போது புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

காதலும், நட்புப் போட்டி போட்டுக் கொண்டு விளையாடும் இந்த கதையில், காமெடிக் காட்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. நண்பர்கள் முன்று பேருமே அவர்களது கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் வசனங்கள் படத்திற்கு முக்கிய பலம்.

ஒரு ஏரியாவுக்குள்ளேயே மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். பெரிய செலவுகள் இல்லாமல் இப்படி தயாராகும் படங்கள் ரசிகர்களுக்குக் கொஞ்சம் சுவாரசியத்தைக் கொடுத்தாலே போதும் வெற்றி பெற்றுவிடும். முதல் பாதியில் செய்யத் தவறியதை இரண்டாவது பாதியில் செய்து ஈடு செய்துவிட்டார் இயக்குனர்.
 
நண்பர்கள், நட்பு என்றாலே இளைஞர்கள் தியேட்டர்களுக்கு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்கள் படம் பார்த்துவிட்டு திரும்பிப் போகும் போது ஏமாற்றம் இல்லாமல்தான் போவார்கள்.
 
நட்புனா என்னானு தெரியுமா – நண்பேன்டா
இந்த படம் கண்டிப்பாக
குடும்பத்துடன் பார்க்கலாம்