ஒரு பெண்ணையும் விடமாட்டார் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விஷால் மீது பாலியல் புகார் கூறிய நடிகை காயத்ரி ரகுராம்்.

சென்னை 29 மே 2021

ஒரு பெண்ணையும் விடமாட்டார் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் விஷால் மீது பாலியல் புகார் கூறிய நடிகை காயத்ரி ரகுராம்

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலால் பல பெண்கள் பாலியல் ரீதியாக
பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் நடன இயக்குனர் மற்றும் நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடிகர் விஷால் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நான் திரைப்பட துறையில் பாலியல் வேட்டையாடுபவர்களையும் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டிப்பது விஷால். புதியதாக சினிமாவில் நுழையும் பெண்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார்.

நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன் படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள்.

உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு உதவி தேவைப்படும் போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள்.

உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்கள் உங்களிடமிருந்து ஓடுகின்றன என்று பதிவு செய்து இருக்கிறார்.

error: Content is protected !!