திரையரங்குகள் உரிமையாளர்களை எதிர்ப்பையும் மீறி நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் OTT தளத்தில் நாளை வெளியீடு.
இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பையும் மீறி நாளை 29-ந்தேதி OTT இணையதளத்தில் வெளியாகிறது.
அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் திரைபபடம் வெளியாக உள்ளது.
2டி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள திரைப்படம்தான் நடிகை ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள். இந்த திரைப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியீடு செய்யாமல் நேரடியாக OTT இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.
இதனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்த்தனர். ‘’பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட்டால் இனி அவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களையும் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று உள்ளிட்ட அவர்கள் தொடர்புடைய படங்களையும் திரையரங்குகளில் வெளியீடு செய்ய மாட்டோம்‘’ என்றும் எச்சரித்தனர்.
இது தமிழ் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை ஜோதிகா நடிக்கும் திரைபபடத்தை OTT இணைய தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பையும் மீறி பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை (29-ந்தேதி) இணைய தளத்தில் வெளி வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து ஜோதிகா கூறும்போது, ‘’கொரோனாவால் மட்டுமே இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம்.
கொரோனா பிரச்சினை முடிந்ததும், நிறைய கதாநாயகர்கள் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாக காத்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை வெளியிடுவதற்கு 2 வருடங்கள் ஆகி விடும். அதனால்தான் இணைய தளத்தில் வெளியிடுகிறோம்‘’ என்றார். நடிகை ஜோதிகா