தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது
சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் நடிகர்கள் கமல்ஹாசன்; விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் முத்த நடிகை கே ஆர் விஜயா உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இன்று நடந்த வாக்குப்பதிவில் 1579 பேர் இதுவரை வாக்குகளை பதிவு செய்து உள்ளனர். இந்த வாக்குப்பதிவுகள் உள்ள பெட்டிகளை பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.