நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது பண மோசடியும் நில மோசடியும் செய்ததாக நகைச்சுவை நடிகர் சூரி அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
சென்னை :09 அக்டோபர் 2020
நகைச்சுவை நடிகர் சூரி தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் விஷ்ணு விஷாலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அதேபோல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும் அறிமுகமாகி இருந்தார்
தமிழ்த் திரைப்பட உலகில் இன்று திடீரென்று ஒரு புகாரை காவல் நிலையத்தில் கொடுத்து பரபரப்பாக்கியிருக்கிறார் நகைச்சுவை நடிகர் சூரி.
எனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி என்னை ஏமாற்றி ரூபாய் இரண்டு கோடி எழுபது லட்சம் மோசடி செய்ததாக இரண்டு பேர் மீது அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் சூரி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி புகார் கொடுத்திருக்கும் இரண்டு பேர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் காவல்துறை உயரதிகாரியான ரமேஷ் குடவாலா என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரும் எப்படி காவல்துறையில் புகார் கொடுக்கும் அளவுக்கு எதிரி ஆனார்கள் என்பது தெரியவில்லை.
நகைச்சுவை நடிகர் சூரி காவல் நிலையத்தில் கொடுத்திருந்த புகாரில் “நான் ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்தேன்.
அந்த திரைப்படத்தில் எனக்கு நாற்பது லட்சம் ரூபாய் எனக்கு சம்பளம் பாக்கியிருந்தது அதை நான் கேட்டபோது அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரான அன்புவேல் ராஜன் தன்னிடம் தற்போது அவ்வளவு பணம் என்னிடம் தற்போது கையில் இல்லை.
ஆனால் என்னிடம் முன்று கோடி ரூபாய் அளவு மதிப்பிலான ஒரு இடம் என்னிடம் உள்ளது.
நீங்கள் மீதம் உள்ள பாக்கி பணத்தைக் கொடுத்தால் உங்களுக்கே அந்த இடத்தை வாங்கி ரிஜிஸ்டர் கொடுத்து விடுவதாக கூறினார்கள்.
நானும் அதனை நம்பி என்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து இரண்டு கோடியே எழுபது லட்சம் ரூபாய்யே அவர்களிடத்தில் நிலம் வாங்கித் தருவதற்காக பணத்தை கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் நிலத்தையும் வாங்கித் தரவில்லை.
நான் கொடுத்த என்னுடைய பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதற்கு நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவான முன்னாள் போலீஸ் உயரதிகாரி ரமேஷ் குடவாலாவும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவர்கள் இருவருடமிருந்தும் என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் மனுவில் கோரியிருந்தார்.
நகைச்சுவை நடிகர் சூரி கொடுத்த மனுவின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் இது குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூரி.
இந்த நகைச்சுவை நடிகர் சூரியின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரிக்கும்படி சென்னை காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடிகர் விஷ்ணு விஷால் அவர்களுடைய தரப்பிலிருந்து இதற்கு மறுப்புச் செய்தியும் உடனடியாக வந்துவிட்டது.
நடிகர் விஷ்ணு விஷால் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது.
சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.
உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும்.
“கவரிமான் பரம்பரை” என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது.
நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.
உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்.
இவ்வாறு நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கையில் கூறியிருக்கிறார்
விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.