தமிழர் என்ற அடையாளம் உலகெங்கும் பரவியிருப்பது மகிழ்ச்சி – விக்ரம் பிரபு.
உலக இருதய தினத்தையொட்டி இதயம் காப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்னர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு அளித்த பேட்டியில், உலகமே இண்டெர்நெட் வழியாய் சுருங்கி வந்தாலும தமிழ், தமிழர் என்ற அடையாளம் மிகப்பெரிய அளவில் விரிந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், ‘வானம் கொட்டட்டும்’ படம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் டிசம்பரில் ‘பன்னாட்டு அளவில்’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறினார்.











