’கல்கி 2898 கி.பி’ திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், விஜய் தேவர் கொண்டா, ராமகோபால் வர்மா, ராஜ் மௌலி, துல்கர் சல்மான், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி பிரம்மானந்தம், மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- நாக் அஸ்வின்.

ஒளிப்பதிவாளர் :- டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச்.

படத்தொகுப்பாளர் :- கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்.

இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாராயணன்.

தயாரிப்பு நிறுவனம் :- வைஜெயந்தி பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- சி அஸ்வினி தத்.

ரேட்டிங் :- 3.25../5.

மகாபாரத குருசேத்திர போர் நடந்து முடிந்து 6000 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்கியின் கதையை  திரைப்படமாக  உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் பலவிதமான அழிவுகளுக்கு பிறகு கலிகாலம் தொடங்கி உலகம் முற்றிலும் அழிந்துவிட்டது.

கடைசியாக காசி என்ற ஒரு நகரம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

மிச்சம் மீதி இருக்கும் உயிர்களை சுப்ரீம் என அழைக்கப்படும் உலகநாதன் கமல்ஹாசன் மட்டும் அங்கு உள்ள மனிதர்கள் அனைவரையும் கொடுங்கோள் ஆட்சி நடத்தி வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மக்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு பஞ்சத்திலும் பசியிலும் அவர்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் பணம் மற்றும் வசதி படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான எல்லா வசதிகளும் உடைய `காம்பிளக்ஸ்’ என்ற தனி உலகில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த காம்பிளக்ஸ் எனற உலகில் பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த கதாநாயகன் பிரபாஸ், காசியில் வாழ்ந்து வரும் நிலையில் தன் எப்படியாவது அதிகளவில் பணத்தை சேர்த்து கொண்டு எப்படியாவது காம்பிளக்ஸ் என்ற உலகில் நுழைந்து விடவேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார்.

இதற்காக கதாநாயகன் பிரபாஸ் எந்த ஒரு எல்லைக்கும் சென்று பணம் சம்பாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

இதற்கிடையே காம்பிளக்ஸ் என்ற உலகில் தன்னிடம் அடிமையாக உள்ள பெண்களின் கருவில் தொடர்புகளை சுமக்க வைத்து அந்தக் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் உலகநாயகன் கமல்ஹாசன் 150 நாட்களுக்கு மேல் கருவில் இருக்கும் சீரத்தை தேடி வருகிறார்.

அந்த காம்ப்ளக்ஸில் தலைவர் சுப்ரீம் உலகநாயகன் கமல்ஹாசன் தேடும் சீரம் கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருப்பதை அறியும் சுப்ரீம் உலகநாயகன் கமல்ஹாசன் அந்த சீரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள்.

அந்த நிலையில் காம்ப்ளக்ஸில் தலைவர் சுப்ரீம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து கதாநாயகி தீபிகா படுகோனே தப்பித்து விடுகிறார்.

கதாநாயகி தீபிகா படுகோனை எப்படியாவது கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு காம்ப்ளெக்ஸ் சுப்ரீம் கமல்ஹாசன் மிகப்பெரிய தொகைத்தரப்படும் என அறிவிக்க, கதாநாயகன் பிரபாஸ் கதாநாயகி தீபிகா படுகோனை தேடி கண்டுபிடித்து சுப்ரீமிடம் ஒப்படைத்து அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையை பெற்றுக்கொண்டு காம்ப்ளக்ஸில் நுழைய வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் கனவை அடைய நினைக்கிறார்.

கதாநாயகி தீபிகா படுகோனேவை பிடித்து கொடுத்து காம்ப்ளக்ஸ் என்ற உலகத்திற்கு கதாநாயகன் பிரபாஸ் நுழைந்தாரா? நுழையவில்லையா? கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் உலக நாயகன் கமலஹாசன் அடைய நினைக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த கல்கி 2898 AD திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கல்கி 2898 AD திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் பிரபாஸ் வழக்கம் போல் அவரது மாஸ் கமர்சியல் ஆன நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகன் பிரபாஸ் சண்டை காட்சிகளில் மாஸ் கான்பித்துள்ளார்.

இந்த கல்கி 2898 AD திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார்கள்.

இந்த வயதிலும் அமிதாப் பச்சனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்கள்.

திரைப்படத்தில் ஓடிரு காட்சிகளில் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வரும் காட்சிகளுக்கு திரையரங்குகளில் விசில் சத்தம் பறக்கிறது.

கதாநாயகி தீபிகா படுகோன் அடிமைத்தனமாக வாழும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார்.

தன் கருவில் இருக்கும் தனது குழந்தைக்கு ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரியாமல் பதறும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஜமௌலி ராமகோபால் வர்மா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.

இவர்கள் வரும் காட்சிகள் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு அளவிற்கும் பயனளிக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு முலம் மிகப்பெரிய அளவில் அசத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை பாடல்கள் மிரட்டலாக உள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.

மகாபாரதம் கதைகளுக்குள் இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்‌ஷன் காட்சி அமைப்புகளோடு இணைத்து நம்பவே முடியாத அளவிற்கு ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.

மேட்மேக்ஸ், பிளாக் பாந்தர் போன்ற ஹாலிவுட் திரைப்படத்தின் இருந்து சாயல்களை இந்தத் திரைப்படத்திலும் அதிகளவில் காணமுடிகிறது.

இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், பிரமிக்க வைக்கும் அளவிற்கு ஒரு நகரத்தை வடிவமைப்பு மக்களை ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருப்பதற்கு இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மிக மிக முக்கியம் ஒரு நல்ல கதை அதன்பிறகு அந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களை வாழவைப்பதற்கு நடிகர்கள் அந்த நடிகர்களுக்கு கதையில் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் தோற்றங்கள் மற்றும் உடைகள் இது மிக மிக முக்கியமானது.

இந்த கல்கி 2898 கிபி திரைப்படத்தில் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையில் கதாநாயகன் மற்றும் நடிகர்கள் அனைவருமே தற்போது உள்ள காலகட்டங்கள் போல் இருக்கிறார்கள் இது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், – இந்த கல்கி 2898 Ad – பிரம்மாண்டமான அன்லக்கி படமாக அமைந்திருக்கிறது..