நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன்’திரைப்பட பாடல் மாற்றம் இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம்
சென்னை 25 மார்ச் 2021
நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கர்ணன்’.
இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ’பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து சூப்ப்ர்ஹிட் ஆனது மட்டுமின்றி இந்த பாடல் குறித்த சர்ச்சை ஒன்று கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தில் வரும் பண்டாரத்தி புராணத்தை மஞ்சனத்திப் புராணம் என்று மாற்றியிருக்கின்றனர்.
பண்டாரத்தி புராணம் பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துகிறது.
ஆகையால் அந்த பாடலை கர்ணன் திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும்
இல்லை எனில் கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று பிரபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில் பண்டாரத்தி மஞ்சனத்தி மாற்றியிருக்கின்றனர்.
இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது.
அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.
பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான்.
சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சி படுத்தினேன்.
ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது.
அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன … பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள்.
இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான்.
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…
காதலே பிரபஞ்ச மாடத்தின
வெளிச்சம் என்று
குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர்
மாரிசெல்வராஜ்











