இன்றுமுதல் (டிசம்பர் 24) சென்னையில் துவங்குகிறது மார்கழியில் மக்களிசை.

சென்னை 24 டிசம்பர் 2021 இன்றுமுதல் (டிசம்பர் 24) சென்னையில் துவங்குகிறது மார்கழியில் மக்களிசை.

மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் கணேசன் , நாட்டுபுற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரும் ,

(25/12/2021) தேதியில் பம்பை பறையிசை குழுவினர் , புத்தர் கலைக் குழுவினர் , கிராமிய புகழ் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா ,சுகந்தி ஆகியோரும்,

(26/12/2021) தேதியன்று ஐஐடியில் ஒப்பாரி , ஜெயக்குமார் மற்றும் குழு ,தெருக்குரல் அறிவு.

(27/12/2021) தேதியன்று ஜெய்பீம் கிளாட் இசைக்குழு , காரியப்பட்டி சேகர் கூட்டு நய்யாண்டி குழு , தலித் சுப்பையா , சித்தன் குணா , திருமூர்த்தி ஆகியோரும் ,

(28/12/2021) தேதியன்று கிருஷ்ண கானா சபாவில் பால முருகன் பெரிய மேளம்-திருவண்ணாமலை , கானா பாடகர்கள் ,முனியம்மா ஆகியோரும்.

(29/12/2021) , (30/12/2021) ஆகிய தேதியன்று தமிழ் இசை சங்கத்தில் , முரசு கலைக்குழு , ஆந்தக்குடி இளையராஜா மற்றும் குழு , கிடாகுழி மாரியம்மா , எருதுகொட்டி பறையிசை – ஜிப்லா , மலைவாழ் மக்கள் பாடல்கள் , குரகா-மங்களூர், கங்காணி குமார், சம்பத், இருளர் கன்னியப்பன் முல்லைக்குழு ஆகியோரும் ,

(31/12/2021) அன்று மார்கழியில் மக்களிசையின் கடைசி நிகழ்வாக மியூசிக் அகாடமியில் பாப்பம்பட்டி ஜம்மா, தி காஸ்ட்லஸ் கலெக்டிவ் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள் .