பிளான் பண்ணி பண்ணனும் திரை விமர்சனம்ரேட்டிங் –2.75 /5.
நடிகர் நடிகைகள் – ரியோ ராஜ், பாலசரவணன், ரம்யா நம்பீசன், ரேகா, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், மாரிமுத்து, முனீஸ்காந்த், தங்கதுரை, எம்.எஸ் பஸ்கர், ரோபோ சங்கர், மற்றும் பலர்.
இயக்கம் – பத்ரி வெங்கடேஷ்.
ஒளிப்பதிவு – B ராஜசேகர்.
படத்தொகுப்பு – சாம் RDX.
இசை – யுவன் ஷங்கர் ராஜா.
தயாரிப்பு – பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் LLP
ரேட்டிங் –2 75/5
தனியார் ஐடி ஊழியர்களான கதாநாயகன் ரியோ ராஜ் மற்றும் பால சரவணன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
இருவரும் தங்களின் குடும்பத்துடன் சென்னையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் தங்கள் அலுவலகம் சார்பாக பார்ட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார்கள்.
நடைபெற இருக்கும் அந்த பார்ட்டியில், திரைப்பட நடிகை ஒருவரை அழைத்து வந்து நடனமாட வைப்பதாக கூறி ஒரு பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள் இருவரும்.
இந்த நிலையில், நடனமாடிய திரைப்பட நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து காணாமல் போகிறது.
கதாநாயகன் ரியோ ராஜின் நண்பரான பால சரவணனின் தங்கையும் காணாமல் போய் விடுகிறார்.
இந்த நிலையில் ஐடி நிறுவனத்தில் இருந்து கொடுத்த பணத்தை திரும்பி கேட்க, கதாநாயகன் ரியோ ராஜ் மற்றும் பால சரவணனும், தொலைந்த பணத்தையும் பாலா சரவணன் தங்கையையும் தேட ஆரம்பிக்கிறார்கள்.
இறுதியில் தொலைந்த பணத்தை கதாநாயகன் ரியோராஜ், பால சரவணன் இருவரும் பணத்தை யார் திருடியது அவர்களை கண்டுபிடித்தார்களா? இல்லையா? அதேபோல் பால சரவணனின் தங்கைக்கு என்ன ஆனார்?
இரண்டையும் தேடி செல்லும் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்னைகளும், அரங்கேறும் காமெடிகளும்தான் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் மீதிக்கதை
கதாநாயகனாக நடித்திருக்கும் கதாநாயகன் ரியோ ராஜ் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
செம்பி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் ரியோ ராஜ் தனது வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இவரின் கதாப்பாத்திரம் ரசிக்கும்படி உள்ளது.
கதாநாயகன் ரியோ ராஜ். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக வாய்ப்பு.
தன் பணியைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் நடிப்பில் எதார்த்தம்.
கதாநாயகியாக ரம்யா நம்பீசனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் தான்.
ரோபோ சங்கர், பாலா சரவணன், தங்கதுரை அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
பல இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
காமெடி கலந்த நல்ல சிரிக்க வைக்ககூடிய திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.
சிறிய கதையை முழு நீள திரைக்கதையாக காமெடியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.
கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.
ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் காதுகளுக்கு இனிமையாக்கியுள்ளது.
மொத்தத்தில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தை இன்னும் கொஞ்சம் பிளான் பண்ணி பண்ணி இருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும்.
பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் குடும்பம் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய நிரைப்படம்.