தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய். 9,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

சென்னை 19 ஜூன் 2022 தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய். 9,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

“தளபதி விஜய்” அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞர் அணி
தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள், மாணவரணி தலைவர்கள், கிளை மக்கள் இயக்க தலைவர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து 18.06.2022 (சனிக்கிழமை) மாலை 6.00.மணியளவில் மறைமலை அடிகள் சாலை (சுதேசி மில் அருகில்) மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுமார் ரூபாய்.9,25,000/-(ஒன்பது லட்சத்து இருபத்தைந்தாயிரம்) மதிப்பிளான செலவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 1000 நபர்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசியும், 925 பெண்களுக்கு புடவையும், 225 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும், 15 நபர்களுக்கு காது கேட்டும் கருவி,700 நபர்களுக்கு சர்க்கரையும், 200நபர்களுக்கு கடிகாரமும், 150 நபர்களுக்கு டிபன் பாக்ஸ்,5 நபர்களுக்கு ஆடு, 1 ஏழை மாணவருக்கு லேப்டாப், 25 நபர்களுக்கு ஐயன் பாக்ஸ், 70 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாலி, 70 நபர்களுக்கு பிளாஸ்டிக் குடம், விளையாட்டு பொருட்கள் கிரிக்கெட் செட் 1 குழவிற்கும், 3 நபர்களுக்கு கேரம் போர்டு, 25 நபர்களுக்கு சேர்,100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், ஜாமன்டிரி பாக்ஸ் மற்றும் உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் உள்ள திரு. முத்துஜான் என்கிற நபருக்கு மருத்துவ உதவியாக ரூபாய். 10,000/-த்தையும், புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் மற்றும் புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி. N.ஆனந்து அவர்கள் வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் பொன்முடி, புதியவன், மோரீஸ், நிரேஷ், சார்லஸ், அமீன் மற்றும் தொகுதி தலைவர்கள் முத்தியால்பேட்டை ராமு, முதலியார் பேட்டை மணிபாலன், ஊசுடு டேவிட், ராஜ்பவன் பிரதீபன், வில்லியனூார் பிரபு, உழவர்கரை ராஜசேகர்,
உருளையன் பேட்டை மணிவண்ணன், நெல்லித்தோப்பு செந்தில், காலாப்பட்டு தர்மா, அரியாங்குப்பம் வசந்த், லாஸ்பேட்டை சரவணன், இந்திராநகர் குமாரவேல், கதிர்காமம் வேல்முருகன், காமராஜர்நகர் விஜி, தட்டாஞ்சாவடி அருள், உப்பளம் முனியன், ஏம்பலம் மணிகண்டன், திருபுவனை கிருஷ்ணா, நெட்டப்பாக்கம் சுகுமார், மண்ணாடிப்பட்டு பாரதிதாசன், இளைஞரணி தலைவர்கள்  உருளையன் பேட்டை பிரான்சிஸ், நெல்லித்தோப்பு செந்தில், உப்பளம் பேட்ரிக், ராஜ்பவன் பிரபு,உழவர்கரை அசோக், அரியாங்குப்பம் ஜீவா, காலாப்பட்டு மனோகர், கதிர்காமம்  அருள்பாண்டி, வில்லியனூர் சுகுமார், திருபுவனை ராஜா, காமராஜர் நகர் சூர்யா, மணவெளி வசந்த், ஏம்பலம்,மதன், இந்திரா நகர் பார்த்திபன், தொண்டரணி தலைவர்கள் அரியாங்குப்பம் பிரபு, உப்பளம் சிவா மற்றும் நிர்வாகிகள்  உருளையன் பேட்டை பிரபு, நாகராஜ், சதீஷ், நரேஷ், வேலு, நெல்லித்தோப்பு வேலு, விஷ்ணுகுமார் மாதவன், ராஜ்பவன் ஆனந்து, ஹரி, சந்துரு, வினோத், யுவராஜ், முதலியார்பேட்டை வரதன், பழனி, ஜெகன், கௌதம், முத்தியால்பேட்டை சுரேஷ், மகேஷ், சந்தோஷ், உப்பளம் ஐயப்பன், சுமன், அருள், வினாயகம், ஜார்ஜ், ஆனந்து, கண்ணன், உழவர்கரை சுரேஷ், விஜய், ரியாஸ், அரியாங்குப்பம் ஜெகதீஷ், பிரதீவ், சிவா, செல்வா, மணிகண்டன், லாஸ்பேட்டை அந்தோணிராஜ், மணவெளி மணிகண்டன், பிரசாந்த், வில்லியனூர் அருண்குமார், சிவராமன், ஏம்பலம் அருள்மணி, கிருஷ்ணசாமி, மணிகண்டன், மற்றும் திரலான ரசிகர்கள் தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.