செய்தித்தாள் திரைப்படத்தின் இயக்குநர் பஞ்ச் பரத் 30 லட்சம் மோசடி.?

சென்னை 21 மார்ச் 2021

செய்தித்தாள் என்கிற படம் TAKEN ENTERTAINMENT என்கிற பெயரில் பஞ்ச் பரத் அவர்களின் மகள் தயாரிப்பாளரின் பெயரில் படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

படத்தில் ஹீரோவாக நடித்த நான்கு நடிகர்களும் அவர் அவர்களின் தகுதிக்கு ஏற்ப படத்தில் நடிக்க பணம் கொடுத்தனர் .

மதிப்பிற்கு உரிய திரு.பஞ்ச் பரத் அவர்கள் வாங்கிய பணத்திற்கு நியாயமாக நடந்து கொள்ளாமல் படத்தின் இரண்டாவது பகுதி முழுவதும் அவர் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உள்ளார்.

ஆனால் படத்தில் நடித்த நடிகர் சதன் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக 30 லட்சம் தவணை முறையில் பணமாக கொடுத்து உள்ளார்.

வாங்கிய பணத்திற்கு நேர்மையாக நடக்காமல் படத்தை ஒன்றுமே இல்லாத சம்மந்தம் சம்மந்தம் இல்லாத காட்சியை வைத்து படத்தை ஒப்பேற்றி உள்ளார்.

திரு .பஞ்ச் பரத் அவர்களே கொஞ்சம் மன சாட்சியோடு நடந்து கொள்ளுங்கள்.

மற்ற நடிகர்கள் நசீர் ,யோகி ,துரை அவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப பணம் குடுத்து இருந்தாலும் அதை  வெளியில்  சொல்ல விரும்பவில்லை .

தாங்கள் அடுத்த படம் விக்ரம் பிரபு வைத்து படம் பண்ணுகிறேன் என சொல்கிறீர்கள் நம்பத்தான் முடியவில்லை.

தயவு செய்து என்னை போல மற்றவர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

என்னை போல பல ஆண்களை ஏமாற்றியது போல பல பெண்களையும் ஏமாற்றி உள்ளீர்கள்.

நீங்கள் என்ன செய்து உள்ளீர்கள் என உங்களுக்கும் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும் .பெண்களின் சாபம் மட்டுமல்ல.

ஆண்களின் சாபமும் உங்களை சும்மா விடாது .

error: Content is protected !!