சுற்றுச்சூழல் பாதிப்பு புகார்; KGF 2 சூட்டிங் ஐதராபாத்துக்கு மாற்றம்
கன்னட திரையுலகை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கே.ஜி.எப்.
இதில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
கடந்தாண்டு டிசம்பரில் வெளியான தமிழ் பதிப்பை நடிகர் விஷால் வெளியிட்டு இருந்தார்.
தற்போது கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.
கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றம் சூட்டிங்கை நிறுத்த உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் கே.ஜி.எப். 2ம் பாகத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்.











