அன் லாக் 1.0 ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு ஜூன் மாதம் 8 ஆம் முதல் சில தளர்வுகள் அறிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பொது முடக்கம் நாளை மே மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து நாட்டில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக உயிர் பலிகள் அதிகரித்து வந்தாலும் மக்கள் அனைவரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

எனவே நமது பிரதமருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் நடத்தி ஆலோசனையின் பிறகு பொது முடக்கம் நீட்டிப்பு என அறிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் 3 கட்டங்களாகத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.

அதாவது அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அதில்

ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

1 ) திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

2 ) பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

3 ) சூழ்நிலைக்கு ஏற்ப திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

4 ) ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

5 ) அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

6 ) பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

7 ) கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

8 ) ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் உணவகங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

9 ) பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

10 ) சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

11 ) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

12 ) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

13 ) மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.