அயோத்தி’ தீர்ப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் ! *
இந்தியாவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வெளியானது.
இந்த தீர்ப்பை பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டினர். இருப்பினும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித், “ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்… தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்… சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் இணைப்பு
ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்… தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்… “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”
— pa.ranjith (@beemji) November 10, 2019











