இயக்குனர் லிங்குசாமிக்கு செக் மோசடி வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு.!

சென்னை 22 ஆகஸ்ட் 2022 இயக்குனர் லிங்குசாமிக்கு செக் மோசடி வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு.!

எண்ணி ஏழு நாள்” என்ற திரைப்படத்திற்காக தான் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014-ஆம் வருடம் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், “எண்ணி ஏழு நாள்” என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூபாய் ஒரு கோடியே முன்று லட்சம் இயக்குனர் லிங்குசாமி பெற்றுள்ளார்.

வாங்கிய கடன்தொகையை திரும்பச் செலுத்தவில்லை.

இதனையடுத்து பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபதி பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி, ருபாய் ஒரு கோடியே முன்று லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு இயக்குனர் லிங்குசாமி வழங்கினார்.

இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்தன.

இதையடுத்து, இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.