அரசியலை போல் நடிகர் சங்கத்திலும் கள்ள ஓட்டு இந்த முறையும் எனது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் – மைக் மோகன் ஏமாற்றம்

அரசியலை போல் நடிகர் சங்கத்திலும் கள்ள ஓட்டு இந்த முறையும் எனது ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டார் – மைக் மோகன் ஏமாற்றம்

தென்னிந்தியா நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நடிகர் மைக் மோகன் வாக்களிக்க வந்தார். ஆனால் அவர் ஓட்டை யாரோ ஏற்கனவே கள்ள ஓட்டாக பதிவு செய்து விட்டார்கள் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

அதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கடந்த முறை தேர்தல் நடந்த போதும் மைக் மோகன் வாக்கு இதே போல கள்ள ஓட்டாக பதிவாகி இருந்தது. அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஷால் மயங்கி விழுந்தார் என்ற பரபரப்பெல்லாம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலிலும் அதே போல மோகன் ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.