இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை – நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை.
இந்த செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது.
தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன். நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை. நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன், இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தல்லப்பட்டேன். எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன், அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன்.
“அன்பு தான் தமிழ் “
ராகவா லாரன்ஸ்
Related posts:
தலைவர் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் ராகவா லாரன்ஸ் கருத்து.
நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் நடிகர் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி.!!
நடிகர் ராகவா லாரன்சுக்காக 100 மூட்டைகள் அரிசி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
நான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.
உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு ராகவா லாரன்ஸ் ஆறுதல் கூறினார்
நான் கற்பனையாக பேசவில்லை நான் மன்னிப்பு கேட்க முடியாது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி 2 திரைப்படத்தில் இயக்குனர் பி வாசு & ராகவா லாரன்ஸ் கூட்டணி.
சூப்பர் ஸ்டார் நடிக்க விரும்பிய பழுவேட்டையராக கதாபாத்திரத்தில் நான் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் !!
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வழியில் தொண்டன் களம் இறங்குகிறார் – நடிகர். இயக்குனர் ராகவா லாரனஸ்!
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரான குட்டு உடைந்தது

