தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியா விஷால்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் மீது தொடர் புகார்கள் வந்ததையடுத்து தமிழக அரசு சங்கத்திற்கு என தனி அதிகாரியை நியமித்துள்ளது. இதனை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் இது குறித்து கூறுகையில், மீண்டும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமே என்றும். தமிழக அரசு தனி அதிகாரி விஷயத்தில் காட்டிய அக்கறையை பைரசி விஷயத்தில் காண்பித்திருக்கலாம் என்றும் கூறினார்.