நடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ திரைப்படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு! *
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதனிடையே, இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.