பாரத பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் நடந்த பாரபட்சம்- பிரபல பாடகர் ஆதங்கம்*
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், “பிரதமர் மோடி அவரக்ளின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பிரதமரின் பாதுகாப்பு வீரர்கள் தன்னிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு அதற்குரிய டோக்கன்களை கொடுத்தார்கள். ஆனால் அதே நேரத்தில் சில பாலிவுட் பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்தார்கள். அவரகளுக்கு மட்டும் செல்போன் எப்படி அனுமதிக்கப்பட்டது⁉ ஏன் இந்த பாரபட்சம்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.