‘மீண்டும் ஒரு மரியாதை’ நாயகி நக்ஷத்ரா திருமணம் – திரைத்துறையினர் வாழ்த்து

சேலம் ஆத்தூர் ஸ்ரீ அருள்ஜோதி குழுமத்தின் தலைவர் A. சேகர் (எ) அண்ணாமலை – அமுதவல்லி தம்பதியரின் மகள் A. நக்ஷத்ராவுக்கும்

பொள்ளாச்சி M. சிவானந்தம் IRTS பணி நிறைவு – ராதாமணி தம்பதியரின் மகனான S. சத்யானந்தனுக்கும்

பிப்ரவரி 26ம் தேதி காலை 06.00 – 7.30 மணி முகூர்த்த நேரத்தில், பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது.

இத்திருமணவிழாவில்    கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்த,  இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், அமீர், இசை அமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர்கள் சாலை சகாதேவன், ராஜேஷ் யாதவ், பாரம்பரிய நடன கலைஞர் சண்முக சுந்தர், நடிகை சுஹாசினி, ஸ்டில்ஸ் யோகா மற்றும் கே.வி. மணி,  தொழிலதிபர்கள் வணங்காமுடி, உதயம் ராஜேந்திரன், அனந்தா ஸ்பா மற்றும் தீனா குமார், டாக்டர். ராஜன், சேலம் RR தமிழ் செல்வம், கொடைகானல் போட் ஹவுஸ் தலைவர் பவானி ஷங்கர் உள்ளிட்ட திரளான திரைத்துறையினர் மணமக்களை வாழ்த்தினர்.