கொரானா நிவாரணப் பொருட்களை சின்னத்திரை தொழிலாளர்களுக்கு சன் டிவி நிறுவனம் வழங்கியுள்ளது.
சென்னை 01 ஜூன் 2021
கொரானா நிவாரணப் பொருட்களை சின்னத்திரை தொழிலாளர்களுக்கு சன் டிவி நிறுவனம் வழங்கியுள்ளது.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி என்ற வள்ளுவன் வாக்குப்படி
கொரானாவின் இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் வெள்ளித்திரை சின்னத்திரை உலகை உலுக்கி விட்டது.
இந்த இக்கட்டான நேரத்தில் சன் டிவி நிறுவனம் கொரானா நிவாரணப் பொருட்களை சின்னத்திரை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது.
சன் ஃபவுண்டேஷன் சார்பில் திருமதி காவேரி கலாநிதி மாறன் அளித்ததை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவி திருமதி சுஜாதா விஜயகுமார் மற்றும் பொருளாளர் திருபாலேஷ்வர். துணைச்செயலர் திரு ஈ.ராம்தாஸ் ஆகியோர் நன்றியுடன் பெற்று கொண்டனர்.











