பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.!!

சென்னை 09 செப்டம்பர் 2022  பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.!!

நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் நாம் உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்ற பெருமை அஞ்சனா அர்ஜுன் அவருக்கே சாரும்.அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார்.

அந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது.

விழாவில் மாண்புமிகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும்
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.

error: Content is protected !!