கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி இயக்குனர் இவி.கணேஷ்பாபு.!!

கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி இயக்குனர் இவி.கணேஷ்பாபு.!!

சென்னை 25 ஆகஸ்ட் 2023 இயக்குனர் இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர்  ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகை ரித்விகா, மிதுன், வடிவுக்கரசி, அஞ்சனா தமிழ்ச்செல்வி, ரோகிணி ஆகியோர் நடிப்பில் NK.இராஜராஜன் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த்தேவா இசையில், சுராஜ்கவி படத்தொகுப்பில், UKlஐயப்பன் (சவுண்ட்) ஒலிப்பதிவில், மனோ கலை இயக்கத்தில், இள. வாசுதேவன் ராஜன் கோவிந்தராஜன்  ஆகியோர் நிர்வாக தயாரிப்பில், உருவாகியுள்ளது.

குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படுகிறது.

இந்த அவலம் பற்றி கருவறை பேசுகிறது என்கிறார், இயக்குனர் இவி.கணேஷ்பாபு.

PRO சதீஷ் (AIM) மக்கள் தொடர்பில் கருவறை உருவாகி இருக்கிறது.

error: Content is protected !!