தமிழ் திரைப்பட உலகில் சாதிக்க தயாராகும் இயக்குனர் ஜெய் அமர் சிங்!
தமிழ் திரைப்பட உலகில் சாதிக்க தயாராகும் இயக்குனர் ஜெய் அமர் சிங்!
சென்னை 24 செப்டம்பர் 2023 இயக்குனர் ஜெய் அமர் சிங் வளர்ந்து வரும் திரைப்பட கலைஞர். துணை இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் இயக்குனர்கள் கதிர், ஹரி மற்றும் அகமது இயக்கிய என்றென்றும் புன்னகை படத்தில் பணிபுரிந்துள்ளார்.
அதனை தொடர்ந்து இவர் இயக்கிய காலேஜ் ரோடு என்ற திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
அதேபோன்று டிவி சீரியல்களும் இயக்கியுள்ளார்.
அதேபோன்று சிங்கப்பூரில் உள்ள டிவி சேனல்களிலும் முக்கிய பணியில் இருந்துள்ளார்.
தற்போது மீண்டும் தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இளமையும் துடிப்பும் கொண்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க உழைத்து வருகிறார் ஜெய் அமர் சிங்.











