எண்பது காலகட்டங்களில்  தமிழ் திரை உலகத்தை கலக்கிய கதாநாயகிகள் இணைந்து கலக்கும் ‘மல்லி’ தொடர் !

எண்பது காலகட்டங்களில்  தமிழ் திரை உலகத்தை கலக்கிய கதாநாயகிகள் இணைந்து கலக்கும் ‘மல்லி’ தொடர் !

சென்னை 04 ஜூன் 2024 1980 காலகட்டங்களில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில்
இணைந்து கலக்குகின்றனர்.

கதாநாயகன் கதாநாயகியை சேர்த்து வைக்கப்
போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நளினியும் கலக்க
அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும்
கூட்டுகிறார் அம்பிகா.

80 காலகட்டங்களில் தமிழ் திரை உலகத்தை கலக்கிக் கொண்டிருந்த மூன்று முன்னால் கதாநாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகாத்தொடர்.

திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த மல்லி தொடரை சரிகமா நிறுவனம் சார்பில்திருமதி B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்யராஜ், நளினி, அம்பிகா, மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, ஐசக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர்  நடித்திருக்கின்றனர்.

இந்த மல்லி தொடருக்கு தமயந்தி திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார்.

விஸ்வாத் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள்ளார்.

படைப்பாக்கத்தை நீடா.கே. சண்முகம் கவனிக்க, படைப்பக்கத் தலைமைப் பணியை ப்ரின்ஸ் இம்மானுவேல் கவனிக்கிறார்.

இந்த முல்லை நெடுந்தொடரை இயக்குநர் ஸ்டாலின் இயக்குகிறார்.

மக்கள் தொடர்பை பெரு துளசி பழனிவேல் கவனிக்கிறார்.