மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கத்தினரால் சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

சென்னை 17 ஜனவரி 2022 மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கத்தினரால் சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

நேற்று ஞாயிற்றுகிழமை கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் முடங்கிய நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை ரசிகர்களால் கொண்டாட முடியாத நிலையில் இலங்கை விஜய் சேதுபதி நற்பணிமன்ற இயக்கத்தினரால் சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

அதோடு ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதோடு விஷேட இரத்ததான முகாம்களை அமைத்து பல ரசிகர்கள் உயிர்காக்கும் ரத்ததானம் வழங்கும் நிகழ்விலும் பங்கு பற்றி வருகின்றனர்.

இந்நிகழ்வுகளில் ஆண்டவன் கட்டளை நடிகர் அரவிந்தனும் விஷேடமாக பங்கேற்றிருந்தார்.

error: Content is protected !!