இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் குதிரைவால் திரைப்படம் மார்ச் 18 திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை 07 மார்ச் 2022 இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் குதிரை வால் திரைப்படம் மார்ச் 18 திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் குதிரைவால்.

கலையரசன், மற்றும்  அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார்.

மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்த காலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும் கனவுகளும் அதன் தாக்கமும் மூலக் கூறுகளாக்கப்பட்ட திரைக் கதையால் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் திரைப்படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர்.

இந்த குதிரைவால் திரைப்படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம்.

இது போன்ற திரைப்படங்கள் திரைப்பட விழாக்களிலும்  விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு.

முதல் முயற்சியாக பொது மக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் திரைப்படங்கள் சமூககருத்துக்கள் கொண்டவையாக இருக்கும், குதிரைவால் முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் என்கிறார்கள்.

மார்ச் 18 முதல் தியேட்டரில் வெளியாகிறது குதிரைவால்.