பின்னணி பாடகி சின்மயி சொல்வது எல்லாம் பொய்…. கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி.
சென்னை 30 மே 2021
பின்னணி பாடகி சின்மயி சொல்வது எல்லாம் பொய்…. கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி.
சமூக வலைதளத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, பின்னணி பாடகி சின்மயி சொல்வது பொய் என்று பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்து வரும் பின்னணி பாடகி சின்மயி, சமீபத்தில் எனது தந்தைக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பின்னணி பாடகி சின்மயி.
இதனிடையே நெட்டிசன் ஒருவர் பின்னணி பாடகி சின்மயியிடம், ஏன் கவிஞர் வைரமுத்துவை உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள் என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பின்னணி பாடகி சின்மயி, கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான் என பதிலளித்தார்.
பின்னணி பாடகி சின்மயி அளித்த பதில் குறித்து கவிஞர் வைரமுத்துவின் மகனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மதன் கார்க்கி கூறியதாவது:
“இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார்.
ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார்.
அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்.
நானும் வாங்கிக் கொடுத்தேன்.
அவரின் வீட்டிற்கு பின்னணி பாடகி சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசி வாங்கி, திருமணத்திற்கு வரவேற்றதாக” மதன் கார்க்கி கூறினார்.
This is just another lie. She wanted to invite my dad for her wedding. But my dad did not give appointment as he was upset with her. She requested me to get an appointment. I got it for her. She went to his house alone, touched his feet, got blessings and invited him. https://t.co/e4eB08d24A
— Madhan Karky (@madhankarky) May 28, 2021











