திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை 23 ஆகஸ்ட் 2021
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க இரவும் பகலும் உழைத்து வரும் தமிழக முதல்வர் மான்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திரை உலகை காக்கும் வகையில் திரையரங்குகளை திறந்து ஐம்பது சதவிகிதம் இருக்கைகளுடன் இயங்குவதர்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகமெங்கும் உள்ள திரை உலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு திரையரங்கை நோக்கி வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வாழ வைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
என்.ராமசாமி (எ) முரளி
தலைவர்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
Tamil Film Industry Producer Council President Mr.#Ramasamy thanks Tamil Nadu Chief Minister #MKStalin for allowing a theater to open with 50% occupancy!#TamilFilmProducerCouncil@mkstalin @CMOTamilnadu @MuraliRamasamy4 pic.twitter.com/zSBz8KaGP2
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) August 23, 2021











