தர்பார் படப்பிடிப்பில் பேரனுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இதனை தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயின். இதன் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

தற்போது, இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அவரது பேரன் வேத் கிருஷ்ணாவும் கலந்து கொண்டுள்ளார். அவர் தாத்தா நடிப்பதை பார்த்து ரசித்துள்ளார். வேத் கிருஷ்ணாவுடன் அவரது தாயார் சவுந்தர்யாவும் கலந்து கொண்டுள்ளார். பேரன் வேத் கிருஷ்ணா தாத்தாவுடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அவர்களுக்கு தெரியாமலேயே படம் எடுத்துள்ளார். இந்தப்படத்தை சவுந்தர்யா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தாத்தா பேரன் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது