நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி என இரண்டிலும் விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘உத்தமவில்லன்’ படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்று இன்று வரை தனது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.