மலையாள மொழி மாற்றம் திரைப்படத்தில் மூலம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் நடிகர் சூர்யா- நடிகர் கார்த்தி?

மலையாள திரைப்பட உலகில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப் படவுள்ள திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிகர் கார்த்தி

இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில திரைப்படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜ், நடிகர் பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு திரைப்படம் இனிமேல் வருமா?

என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன்படி இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி- நடிகர் தனுஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது,

அதன் பின்னர் நடிகர் இயக்குனர் சசிகுமார்- நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின.

அதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது அந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும், நடிகர் கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சகோதரர்களான இவர்கள் இருவரும் ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் உறுதியானால், அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் முழுநீள திரைப்படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.