மீண்டும் இயக்குநர் ஹரி கூட்டணியில் இணையும் நடிகர் சிம்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும.
கடந்த 2004ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான படம் ‘கோவில்’. இந்த படத்தில் சிம்பு, சோனியா அகர்வால், நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிம்பு – ஹரி கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் இயக்குநர் ஹரி, சிம்புவை சந்தித்து கதையை கூறியதாகவும். இந்த புதிய படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.