ஆந்திராவில் நடிகர் தளபதி விஜய் படத்திற்கான மாஸ் ஓப்பனிங்
நடிகர் தளபதி விஜய்யின் ‘பிகில்’ படம் வரும் 25ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படம் ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும் பட்சத்தில், இப்போது ஆந்திராவிலும் நடிகர் தளபதி விஜய்க்கு பெரிய இடம் பிகில் படம் மூலம் கிடைத்துள்ளது.
அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து விஜய்யின் பிகில் படம் 675 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். நிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களில் ரிலீஸாகவுள்ளது.











