இயக்குனர் மணிரத்னம் மீது தேசதுரோக வழக்கு.

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மதவாதம் மற்றும் அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேச விரோதி, அர்பன் நக்சல் என கூறுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். இந்த கடிதத்தை எதிர்த்து பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு பதிந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.