இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்❗*
தமிழில் ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ திரைப்படங்களை இயக்கிய பி.சந்தோஷ், தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். முற்றிலும் புதிய கதையம்சம், புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அது குறித்து அறிவிப்புகள் இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் இயக்குனர் பி.சந்தோஷ் கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.











