தீராத திருட்டுக் கதை பிரச்சினைகள்; சர்கார்ரை அடுத்து பிகிலும் சிக்கியது.!

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை திருட்டு வெட்ட வெளிச்சமாக பின்னர் ஒப்புக் கொண்டு படத்தின் தலைப்பை கதாசிரியர் பெயரை போட்டனர்.

தற்போது விஜய் நடித்து வரும் பிகில் படமும் திருட்டுக் கதை பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில், ஏஆர். ரஹ்மான் இசையில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘பிகில்’.

இப்படத்தின் கதை தன்னுடையது என கே.பி. செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தள்ளார்.

மேலும் படத்திற்கு தடையும் கேட்டிருந்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக கே.பி. செல்வா அவருடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு, நெறய வாக்குவாதம் அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல !!

அவங்க சொன்னதெல்லாம் ‘காப்பிரைட்’ கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க” அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க, செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு ,

அவங்களும் இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான் நாமளும் ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல திரும்ப பெறும் மனு தாக்கல் பண்ண !! அதுக்கு நீதிபதி அத ஏற்றுக்கொண்டு பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க !!

இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் தாக்கல் பண்ண போற, ஆனா இதுக்கு நடுவுல ஏஜிஎஸ் தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க , அதுல உண்மையாவே எனக்கு என்ன புரியலன்னா நான் திரும்ப பெறும் மனு பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனத, அவங்க என்னமோ வாதாடி ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ் வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க !! நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் !!

நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு அமைதியா இருந்த, இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க !!,” எனப் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!