நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் ராணா டக்குபட்டி நடிக்கும் ‘காடன்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு.

சென்னை 03 மார்ச் 2021

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் நடிகர் ராணா டக்குபட்டி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் காடன்.

யானையும் காட்டையும் மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் டிரைலர் உலக வன உயிரனங்கள் தினமான இன்று (மார்ச் 3) வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் ‘ஆரண்யா’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ எனும் பெயரிலும் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஷிரியா பில்கவுன்கர் மற்றும் ஜோயா ஹுசைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மூன்று மொழிகளிலும் கதாநாயகனாக ராணா டக்குபட்டி நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் இந்தியில் புல்கிட் சாம்ராட்டும் நடிக்கின்றனர்.

மேலும், உன்னி எனும் யானை சிறப்பு வேடத்தில் தோன்றுகிறது.

மேலும் இந்த காடன் திரைப்படத்தில் அனந்த் மகாதேவன், ரகு பாபு, ரவி காலே, ஸ்ரீநாத், ஆகாஷ், சம்பத் ராம், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு அசோக் குமார் ராஜி, படத்தொகுப்பு புவன், சண்டைக் காட்சிகள் ஸ்டன் சிவா, ஸ்டன்னர் சாம், இசை சாந்தனு மோயித்ரா.

 ‘காடன்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

டிரைலரை வெளியிட்ட கையோடு ஹைதராபாத்துக்கு பறந்த படக்குழுவினர் அங்கு தெலுங்கு டிரைலரை வெளியிட்டனர்.

இரு நிகழ்ச்சிகளும் கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டன.

இந்தி ரசிகர்களுக்காக காணொலி மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ளது. இவ்வாறாக, 24 மணி நேரத்தில் மூன்று நிகழ்ச்சிகள் என படக்குழுவினர் பரபரப்புக் குழுவாக மாறியுள்ளனர்.

“காடன் காட்டைப் பற்றிய கதை என்பதால், அதன் டிரைலரை வெளியிடுவதற்கு உலக வன உயிரனங்கள் தினம் பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். மும்மொழி ரசிகர்களையும் இப்படம் கவரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

வன சூழலியலைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை காட்டிலேயே செலவழிக்கும் ஒருவரைப் பற்றிய கதை தான் காடன். ‘பாகுபலி’ மற்றும் ‘தி காஜி அட்டாக்’ஆகிய மும்மொழி திரைப்படங்களுக்கு பிறகு, ராணாவின் மூன்றாவது மும்மொழி படம் இதுவாகும். மார்ச் 26-ம் தேதி இப்படத்தை வெளியிட  திட்டமிடப்பட்டுள்ளது.