நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு பிடித்தது உண்மையான பாம்பு இல்லை இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை : 06 நவம்பர் 2020

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது.

உண்மையில் அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம்.

அது திரைப்படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது.

இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது.

எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின்றோம்இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார்,

நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவு படுத்தினோம்.

அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம்.

திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டிதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது.

திரைப்படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.

நன்றி

மாதவ் மீடியா நிறுவனம் & சுசீந்திரன்

பாலாஜி காப்பா
சுசீந்திரன்
தயாரிப்பாளர் இயக்குனர்

error: Content is protected !!