நடிகர் பிருத்விராஜ் நடிகை நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படம் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது!

சென்னை 12 ஆகஸ்ட் 2022 நடிகர் பிருத்விராஜ் நடிகை நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படம் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது!

இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாரன் சமீபத்தில் கடுவா திரைப்படத்தின் மூலம் நல்ல வெற்றியைப் பெற்றார்.

நடிகர் பிருத்விராஜ் தனது கையில் பல திரைப்படங்கள் இருக்கிறது.

இவர் மிகவும் பிஸியாக ஒரு நடிகர். பிருத்விராஜின் அடுத்ததாக வரவிருக்கும் திரைப்படம் கோல்ட்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும்.

இந்த திரைப்படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வரும் என இன்று திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது முகநூல் மூலம் உறுதி செய்துள்ளார்.

பொதுவாக ஓணம் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் அஜ்மல் அமீர், செம்பன் வினோத் ஜோஸ், ஷம்மி திலகன், ஜெகதீஷ், பாபு ராஜ், ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுப்ரியா மேனன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இநத திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

error: Content is protected !!