இயக்குனர் பாலாவின் ‘வணங்கான்’ தலைப்பு பயன்படுத்த இயக்குனர் பாலாவிற்கு தடை இல்லை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

இயக்குனர் பாலாவின் ‘வணங்கான்’ தலைப்பு பயன்படுத்த இயக்குனர் பாலாவிற்கு தடை இல்லை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

சென்னை 20 ஜூலை 2024 இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும்
தயாராகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’ இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இந்த வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, திரைப்பட வெளியீட்டை நோக்கி இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

இந்த நிலையில் எஸ்.சரவணன் என்பவர் ‘வணங்கான்’ என்கிற தலைப்பு இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது நிரைப்படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாண்புமிகு. வேல்முருகன் எஸ்.சரவணன் தலைப்பு சம்பந்தமாக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் வணங்கான் என்கிற தலைப்பை தனகளது திரைப்படத்திற்கு பயன்படுத்த இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எந்தவித தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளார்.

இயக்குநர் பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாதங்களை முன் வைத்து வாதாடினார்.

பல தடைகளைக் கடந்து திரைப்படம் வெளியிட்டு நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’ படக்குழுவினருக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு இன்னும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

error: Content is protected !!