கொரோனா சேவைக்கு நடிகர் சூர்யா நடிகர் கார்த்தி இருவரின் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் SR பிரபு அட்வைஸ்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனால் வேலையிழந்து தவிக்கும் ஏழை மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு மாதமாக வீட்டில் இருப்பதால் தங்களின் அன்றாட வாழ்க்கையே இவர்களுக்கு கேள்விக்குறியாகி விட்டது.
இதனால் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் தங்களால் இயன்றளவில் ஏழை மக்களுக்கு உணவளித்து நிவாரண உதவிகள் புரிந்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ரசிகர்களும் நிவாரண பொருட்களை வழங்கியும் உணவளித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிகர் கார்த்தியின் உறவினரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு இது குறித்து கூறியுள்ளதாவது…
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ரசிகர்கள் ஓய்வின்றி ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மாஸ்குகள் கொடுத்து வருகின்றனர். அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள் குவித்த வண்ணம் உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மக்களுக்கு உதவி செய்யும் போது மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள், சமூக விலகலையும் கடைபிடியுங்கள்’ என பொதுமக்களிடையே தெரிவித்து வருகின்றனர்.
Friends from #Suriya na & #Karthi na fan clubs are working tirelessly to provide food & safety gears to people all over the state. Appreciate them for their best efforts. Meanwhile I sincerely request them to be safe and maintain proper social distance while helping others.
— SR Prabhu (@prabhu_sr) April 18, 2020