சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் குடும்பத்தாருடன் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் போனில் ஆறுதல் கூறியுள்ளார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மொபைல் போன் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் அழைத்துச் சென்று போலீஸ் தாக்கியதில் இருவரும் மரணமடைந்தனர்.
அங்கு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர்.
காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரிக்கையும் வைத்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் இருவரை காவல்துறையினர் அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை பல்வேறு துறையினர் கண்டித்து வருகின்றனர்.
திரைத்துறையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.
நீதித்துறை அந்த போலீசாருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஜெயராஜின் மனைவி, மகளிடம் பேசிய அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இத்தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ரஜினியை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் பேசியுள்ளார். அவர்களிடம் ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் தன் மநீம சார்பாக அதன் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே போலீசாரின் தாக்குதலை கண்டித்து கமல்ஹாசன் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அந்த செய்தியை நம் தளத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
திமுக சார்பில் நடிகர் உதயநிதி நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











